தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது: தகுதிப் பட்டியல் அனுப்ப உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 7, 2025

தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது: தகுதிப் பட்டியல் அனுப்ப உத்தரவு

தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது: தகுதிப் பட்டியல் அனுப்ப உத்தரவு

சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதி பெற்றவர்களை பட்டியலை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியர்களுக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தலைமை ஆசிரியர்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்து அதுசார்ந்த விவர அறிக்கையை மாநில தேர்வுக் குழு வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளவர்கள், தண்டனை பெற்றவர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோரை விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது என்பன உட்பட வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது 11.04.2022 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள் . அதனைத் தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பார்வையில் கண்டுள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . பள்ளிக் கட்டமைப்பு , கல்விச் செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அளவிலான தேர்வுக் குழு , பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு , ஆய்வின் அடிப்படையில் பார்வையில் கண்டுள்ள அரசாணையின் பின்னிணைப்பு -1 ல் தெரிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு இரு மடங்கு எண்ணிக்கையிலான தலைமை ஆசிரியர்களைத் தெரிவு செய்து மதிப்பீட்டுப் படிவம் மற்றும் விவர அறிக்கையினை மாநிலத் தேர்வுக் குழுவுக்கு 25.04.2025 க்குள் பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது . இப்பொருள் சார்ந்து , பார்வையில் கண்டுள்ள அரசாணையின் படி மாவட்ட தேர்வுக் குழு அமைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய / பணியாற்றி வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் , பள்ளி வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியரின் பங்களிப்பு ஆகியவனவற்றை கருத்திற்கொண்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு மாநில தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைகள் சமர்ப்பித்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD DSE - Anna Leadership Award Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.