No need to maintain copies of Government Servants' Orders - CM Cell Reply - அரசு ஊழியர்களின் ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை - CM Cell Reply
அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது. ஆணைகளின் நகல்கள் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்!
அய்யா, வணக்கம். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதே போதுமானதா? அல்லது அந்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா? ஆணைநகல் பராமரிக்காத பட்சத்தில், பணிப்பதிவேட்டின் பதிவையே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுமா? என்ற விவரம் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 88, 9th Cross street, Thiruvalluvar nagar, விருத்தாசலம், Vridhachalam TALUK, Cuddalore - 606001, TAMILNADU. TRANSFERS NORTE
PERSONNEL & АЛЕСТУ
C.No.20887/P&AR (FR.III) Dept., dated08.09.2020 தனியர் மனுவில் கோரியுள்ள, பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74(iv) பின்ணினைப்பு-II- -III- ((Ruling under FR.74 (iv) Annexure-II-Part-III)-ல் உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rules/dept/22- காணலாம். மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை தொடர்பான ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது. அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.