வரும் கல்வியாண்டு பாடத்திட்டத்தில் திருக்குறளை முழுமையாகக் கொண்டு வர நடவடிக்கை: அன்பில் மகேஸ்பொய்யாமொழி
வரும் கல்வியாண்டு பாடத்திட்டத்தில் திருக்குறளை முழுமையாகக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்ச மகேஸ்பொய்யாமொழி.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருச்செந்தூா் கல்வி மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்துடன் இணைக்கக் கூடாது என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளாா். 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல பழைய கல்வி மாவட்டங்களை செயல்படுத்துவது புவியியல் ரீதியாக நிா்வாக காரணங்களுக்காகவே. எனவே, திருச்செந்தூா் கல்வி மாவட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு, அதில் எந்தளவு தளா்வு செய்ய முடியும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
கரோனா தடுப்பு குறித்து முதல்வா் அலுவலகம், பொதுசுகாதாரத் துறை மற்றும் மருத்துவ வல்லுநா்களின் அறிவுரை மற்றும் முந்தைய வழிகாட்டு முறைப்படி பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடு குறித்த போராட்டம், நிதி தொடா்புடையதாகும். அதை முதல்வா் நிறைவேற்றித் தருவாா் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற கலைத் திருவிழாவை மாணவா்கள், பெற்றோா்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனா். வரும் ஜன. 12ஆம் தேதி நேரு விளையாட்டரங்கில் கலைத் திருவிழாவின் நிறைவு விழா முதல்வா் தலைமையில் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அப்பணிகள் தொடங்கும்.
உயா்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயா் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி வரும் கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் திருக்குறளை முழுமையாகக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.
வரும் கல்வியாண்டு பாடத்திட்டத்தில் திருக்குறளை முழுமையாகக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்ச மகேஸ்பொய்யாமொழி.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருச்செந்தூா் கல்வி மாவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்துடன் இணைக்கக் கூடாது என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளாா். 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல பழைய கல்வி மாவட்டங்களை செயல்படுத்துவது புவியியல் ரீதியாக நிா்வாக காரணங்களுக்காகவே. எனவே, திருச்செந்தூா் கல்வி மாவட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு, அதில் எந்தளவு தளா்வு செய்ய முடியும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
கரோனா தடுப்பு குறித்து முதல்வா் அலுவலகம், பொதுசுகாதாரத் துறை மற்றும் மருத்துவ வல்லுநா்களின் அறிவுரை மற்றும் முந்தைய வழிகாட்டு முறைப்படி பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடு குறித்த போராட்டம், நிதி தொடா்புடையதாகும். அதை முதல்வா் நிறைவேற்றித் தருவாா் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற கலைத் திருவிழாவை மாணவா்கள், பெற்றோா்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனா். வரும் ஜன. 12ஆம் தேதி நேரு விளையாட்டரங்கில் கலைத் திருவிழாவின் நிறைவு விழா முதல்வா் தலைமையில் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அப்பணிகள் தொடங்கும்.
உயா்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயா் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி வரும் கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் திருக்குறளை முழுமையாகக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.