பொங்கல் பரிசுடன் ரேஷன் அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 2371 நாள் : 28.12.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 28, 2022

பொங்கல் பரிசுடன் ரேஷன் அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 2371 நாள் : 28.12.2022

பொங்கல் பரிசுடன் ரேஷன் அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் கரும்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

செய்தி வெளியீடு எண்: 2371

நாள் : 28.12.2022

செய்தி வெளியீடு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.சு. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து, இன்று (28-12-2022) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கிலோ பச்சரிசி, கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனடிப்படையில், ஏற்கௌவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை 2-1- 2023- க்கு பதிலாக 9- 1- 2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார்கள்.

• பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி 3- 1- 2023 முதல் 8- 1- 2023 வரை நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் திரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேளாண்மை மற்றும் உழவர் நலத் . துறைச் செயலாளர் திரு. ரி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.