இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 28, 2022

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்; ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது என்றும் விளக்கம்

📚திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

👉பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது.

👉இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. 👉தேர்தல் அறிக்கைகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதுபோல் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.

👉கொரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசும் சுகாதாரத்துறையும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது.

👉வரும் கல்வியாண்டில், பாடத்திட்டங்களில் திருக்குறள் அதிகமாக இடம்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.