ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வாகன சீராளர் வேலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 24, 2022

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வாகன சீராளர் வேலை

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வாகன சீராளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் தகுதி விவரங்கள்: 

பணி: வாகன சீராளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 34க்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.kanyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்:  24.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/03/2022030931.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.