கல்வித்துறையில் அரசியலா? தலைமையாசிரியர்கள் அதிருப்தி - Politics in education? Principals unhappy
அரசு உயர்நிலை மற் றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் எழுதிய, புத்தகம் விநியோகிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் எழு திய, 'தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற நூல், கடந்த மே 17ம் தேதி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சரால் வெளி யிடப்பட்டது.
136 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை விமர்சிப்பதாகவும்,
மும்மொழிக் கொள்கை தொடர்பான கருத்துக் களை உள்ளடக்கியதா கவும் அமைந்துள்ளது. கடந்த 10ம் தேதி திரு வள்ளூர் மாவட்டத்தில் நடந்த, உயர்நிலை மற் றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டத்தில், அனைத்து தலைமை யாசிரியர்களுக்கும் இப் புத்தகம் வழங்கப்பட் டுள்ளது.
வாய்மொழி உத்த ரவின் பெயரில் இது வழங்கப்பட்டதாகவும், விரைவில் அனைத்து மாவட்ட தலைமையா சிரியர் கூட்டங்களிலும் வழங்கப்படலாம் என வும், கோவை தலை மையாசிரியர்கள் புலம் புகின்றனர்.
யில், 'தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப் பதாகக் கூறும் தமிழக அரசு, மும்மொழிக் கொள்கை மற்றும் நவோதயா பள்ளிக ளைத் தவிர்த்து, அக் கொள்கையின் பிற அம் சங்களை மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. கூட்டங் களில் நூற்றுக்கணக்கில் விநியோகிக்கப்படும் இந்த புத்தகங்களுக்கு, யார் நிதியுதவி செய்கி றார்கள்?
பள்ளிகளில் அரசி யல் புகுத்தக்கூடாது. ஆனால், அமைச்சரின் அரசியல் கருத்துக்கள் அடங்கிய புத்தகத்தை, அதிகாரப்பூர்வ டங்களில் வழங்குவது, மரபை மீறுவதாக உள் ளது' என்றனர்.
Tuesday, November 18, 2025
New
கல்வித்துறையில் அரசியலா? தலைமையாசிரியர்கள் அதிருப்தி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.