எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக். 7 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டில்(2025-26) 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து 2-ம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி நடைபெறும் நாளில் தொடக்க வகுப்புகளில் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படக்கூடாது. ஆசிரியர் இல்லை எனில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாற்று ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் எண்ணும் எழுத்தும் பயிற்சி - 2025 2028 ஆம் கல்வியாண்டு - எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல்- தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் பங்கேற்பாளர்களை பணி விடுவிப்பு செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக
இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 07.10.25 - 10.1025 இந்த நாட்களுக்குள் ஏதாவதுஒரு நாள் ஒன்றிய அளவில் நடைபெறும்...
Ennum Ezhuthum Term - II Block Level Training - Reg. .pdf Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.