B.Ed, M.Ed படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் B.Ed மற்றும் M.Ed படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
B.Ed, M.Ed படிப்புகளுக்கு காலியாக உள்ள 579 இடங்களுக்கு tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
பி.எட் . மற்றும் எம்.எட் . பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு அறிவிப்பு...
பி.எட் . மற்றும் எம்.எட் . பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி . செழியன் அவர்கள் தகவல்...
பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் -மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர்
முனைவர் கோவி. செழியன் அவர்கள் தகவல்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி 20.06.2025 அன்று சென்னை இராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ஆம் ஆண்டிற்கான பி.எட் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டு, மாணாக்கர் சேர்க்கை நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15.09.2025) முதல் 30.09.2025 வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணாக்கர் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணாக்கர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி 30.09.2025 வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in στοότη வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும் இணையதளம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Monday, September 29, 2025
New
B.Ed, M.Ed படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.