இன்று BEO பதவி உயர்வு கலந்தாய்வு
பள்ளிக் கல்வியில் 50 சதவீத வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியி டங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக வெள் ளிக்கிழமை ளது. நடைபெறவுள் இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன.
அதன்படி நிகழாண்டுவட்டா ரக்கல்வி அலுவலர் காலிப் பணி யிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜன. 1-ஆம் தேதி நிலவ ரப்படி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து வட்டாரக் கல்வி அலு வலர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற 329 நபர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந் தாய்வுவெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு எமிஸ் தளம் வழி யாக மாவட்டக் கல்வி அலுவல கங்களில் நடத்தப்படவுள்ளது.
இதையடுத்து இறுதி முன் னுரிமைப் பட்டியலில் 1 முதல் 175 வரையில் இடம் பெற் றுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தக வல் தெரிவித்து இந்த கலந்தாய் வில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும், இக்கலந்தாய்வை நடத்தத்தேவையானஅனைத்து முன்னேற்பாடுகளையும் அந் தந்த மாவட்டக் கல்வி அலுவ லர்கள் மேற்கொள்ள வேண் டும் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.