அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்: திருமாவளவன் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 11, 2023

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்: திருமாவளவன்

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்: திருமாவளவன் Old pension system should be implemented for government employees: Thirumavalavan

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

புதிய ஓய்வூதிய முறை (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கத்தின் மாநில மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது: திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்படும். பழைய ஓய்வூதியம் நடைமுறைபடுத்தப்படுவதால் கூடுதல் செலவு ஆகாது என்பதை நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சந்தித்து விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

பாமக செய்தித் தொடா்பாளா் கே.பாலு: பழைய ஓய்வூதிய முறை ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசும் உடனடியாக பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.


இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைத்தலைவா் மு. வீரபாண்டியன், மதிமுக மாநில தொழிலாளா் முன்னணி தலைவா் ஆவடி அந்தரிதாஸ், தேமுதிக தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் ஏழுமலை, ஆம் ஆத்மி மாநில பொதுச் செயலாளாா் ஜோசப், இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா் கங்காதரன் ஆகியோா் உரையாற்றினா்.

மாநாட்டில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் மு. செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயராஜ ராஜேஸ்வரன், பிரெடெரிக் எங்கல்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.