தமிழக அரசின் நில அளவை பதிவேடுகள் சார்நிலைப் பணிகளில் அடங்கும், சர்வேயர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாமென தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற டி.என்.பி.எஸ்.சியின் இணையதள பக்கத்திற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150. டி.என்.பி.எஸ்.சி நிரந்தர பதிவு ஏற்கனவே வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது நில அளவர் அல்லது வரைவாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2022. (செப்டம்பர் 1 - 3 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும்) காலி பணியிடங்களின் எண்ணிக்கை:
நில அளவர் (798) வரைவாளர் (236), அளவர்/உதவி வரைவாளர் ( 55). மொத்தம் 1,089 பணியிடங்கள்.
வயது : 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஆகிய பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு நடைபெறும் நாள் : 6.11.2022
தேர்வு மையங்கள் :
சென்னை,கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம்,நாகர்கோவில்,மதுரை,உதகமண்டலம்,புதுக்கோட்டை,ராமநாதபுரம், சேலம், காரைக்குடி,தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர். தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 300 மதிப்பெண்களுக்கான கொள்குறி வகையிலான முதல் தாளில் சர்வே உள்ளிட்ட பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.
150 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாளில் பொதுத்தமிழ், பொது அறிவு வினாக்கள் உள்ளடங்கியதாக இருக்கும். தலா 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிவிக்கையை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற டி.என்.பி.எஸ்.சியின் இணையதள பக்கத்திற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150. டி.என்.பி.எஸ்.சி நிரந்தர பதிவு ஏற்கனவே வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது நில அளவர் அல்லது வரைவாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2022. (செப்டம்பர் 1 - 3 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும்) காலி பணியிடங்களின் எண்ணிக்கை:
நில அளவர் (798) வரைவாளர் (236), அளவர்/உதவி வரைவாளர் ( 55). மொத்தம் 1,089 பணியிடங்கள்.
வயது : 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஆகிய பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு நடைபெறும் நாள் : 6.11.2022
தேர்வு மையங்கள் :
சென்னை,கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம்,நாகர்கோவில்,மதுரை,உதகமண்டலம்,புதுக்கோட்டை,ராமநாதபுரம், சேலம், காரைக்குடி,தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர். தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 300 மதிப்பெண்களுக்கான கொள்குறி வகையிலான முதல் தாளில் சர்வே உள்ளிட்ட பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.
150 மதிப்பெண்களுக்கான இரண்டாம் தாளில் பொதுத்தமிழ், பொது அறிவு வினாக்கள் உள்ளடங்கியதாக இருக்கும். தலா 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிவிக்கையை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.