சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிறுவனங்களில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெட்ரோ ரயிலில் மாதம்தோறும் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி, திருவான்மியூர் ஸ்வபோதினி சிறப்பு பள்ளியை சேர்ந்த 26 மாணவ, மாணவிகள் கிண்டி முதல் விம்கோ நகர் மெட்ரோ வரை நேற்று கல்வி சுற்றுலாவாக பயணம் சென்றனர்.
சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரை அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் என 58 ஆயிரத்து 528 பேர், 300க்கும் மேற்பட்ட முறை கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை கல்வி சுற்றுலாவாக இலவசமாக பயணம் செய்துள்ளனர்.மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வது புது அனுபவத்தை தருவதாகவும், இதில் உள்ள சலுகை கட்டணத்தை தெரிந்து கொண்டதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். பிற மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரும் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செல்ல girirajan.l@cmrl.in, shrutishambavi.r@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Sunday, July 31, 2022
New
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரும் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செல்ல மின்னஞ்சல்
மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.