மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 23, 2022

மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கோயம்புத்தூர் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிகளின் சுகாதார வளாகம், நூலகம், நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய மேயர் திருமதி. கல்பனா, துணை மேயர் திரு.வெற்றிசெல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எ.ஜி.வெங்கடாச்சலம், திருமதி.வானதி ஸ்ரீனிவாசன், கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் திரு.நா.கார்த்திக், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் திரு.நந்தகுமார் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. ஆகியோரும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.