Scrutiny Meeting for Public Examination Work Monitoring Officers shifts to Trichy - DGE Proceedings! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 4, 2024

Scrutiny Meeting for Public Examination Work Monitoring Officers shifts to Trichy - DGE Proceedings!



Scrutiny Meeting for Public Examination Work Monitoring Officers shifts to Trichy - DGE Proceedings! பொதுத் தேர்வுப் பணி கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சிக்கு மாற்றம் - DGE செயல்முறைகள்!

பள்ளிக்கல்வித்துறைச் சார்ந்த அலுவலர்களை மார்ச் / ஏப்ரல் 2024 -ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களுக்கும் கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பார்வை - 2 - இல் காணும் அரசுத்தேர்வுகள் இயக்கக இயக்குநர் அவர்களின் நேர்முகக்கடிதத்தில் 06.02.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டத்தில் கலந்துக் கொள்ளக்கேட்டுக்கொள்ளப்பட்டது . தற்சமயம் இக்கூட்டம் அதே நாளில் ( 06.02.2024 ) திருச்சி மாவட்டம் , சமயபுரம் , தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் பொதுத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படவுள்ளதால் அனைத்து கண்காணிக்கும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு : அரசாணை ( வாலாயம் ) எண் : 77 ,



CLICK HERE TO DOWNLOAD DGE Proceedings

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.