த.வெ.க., ஆட்சிக்கு வருவதற்கு ஆசிரியர்களே முக்கிய காரணம் - அமைச்சர் பேச்சு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 8, 2026

த.வெ.க., ஆட்சிக்கு வருவதற்கு ஆசிரியர்களே முக்கிய காரணம் - அமைச்சர் பேச்சு

த.வெ.க., ஆட்சிக்கு வருவதற்கு ஆசிரியர்களே முக்கிய காரணம் - அமைச்சர் முகமது பர்வேஸ் பேச்சு



புதுக்கோட்டை மாவட்டம் 5 அறந்தாங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் -நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பேசியதாவது:- தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். போகப்போக படிப் படியாக மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவோம்.

குறிப்பாக இதற்கு முன்பு அறந்தாங்கி நகராட்சியில் பொறுப்பு ஆணையர்களே பணியாற்றி வந்தார்கள்.

அதனை மாற்றி நாங்கள் பொறுப்பிற்கு வந்து சில வாரங்களிலேயே புதிய நகராட்சி ஆணையரை கொண்டு வந்துள் ளோம். அதை போன்றே இனி வரும் காலங்களில் மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு செயல்தி றன் இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த வர்களில் ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு என்று கூறியது டன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.