இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம்! - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 25, 2024

இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம்! - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...



ஜாக்டோ ஜியோ இன்றைய ( 24.02.2024 ) முடிவுகள் அறிவிப்பு...

இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம் !

மான்ய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் !

பதுங்கிப் பாயும் வேங்கையின் பொறுமையுடன் பசித்திருப்போம் ! விழித்திருப்போம் !

ஒற்றுமையுடன் இருப்போம் !

ஜாக்டோ ஜியோ இன்றைய ( 24.02.2024 ) முடிவுகள் அறிவிப்பு. 24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...

*ஜாக்டோ - ஜியோ* ( *JACTTO-GEO* )

*(தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு)*

*நாள்:24.02.2024*

*இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம்!*

*பட்ஜெட் மான்ய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி வைப்போம்!*

*நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்!*

*பதுங்கிப் பாயும் வேங்கையின் பொறுமையுடன் பசித்திருப்போம்!*

*விழித்திருப்போம்!*

*ஒற்றுமையுடன் இருப்போம்!*



*அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே, அரசு ஊழியர்களே, அரசுப்பணியாளர்களே*

*நாமெல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய உரிமைகளுக்காக மாநில அரசிடம் தொடர்ந்து நம்முடைய கோரிக்கைகளை வைத்து வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்க பலகட்ட போராட்டங்களை வடிவமைத்து அவற்றை செவ்வனே செயல்படுத்தி அரசுக்கு அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறோம். நமக்கான முதல்வர் நம்மிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலும் அதே சமயம் அரசின் நிதி ஆதாரங்கள் மேம்படும் வரை நம்மை முதல்வர் காத்திருக்கச் சொன்னதை கருத்தில் கொண்டும் நாம் கடந்த இரண்டரையாண்டுகளாக வாழ்வாதார கோரிக்கைகளுக்கான காலஅவகாசத்தை பொறுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நாம் முதல்வரை மூன்று முறைகள் நேரில் சந்தித்து நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முறையிட்டிருக்கிறோம். நம்முடைய நெடுநாள் பொறுமைகளை அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம். மாநாடு நடத்தியும் நம்முடைய கோரிக்கைகளில் பால் உள்ள நியாயங்களை அவசியங்களை, அவசரங்களை அவரிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.* *தமிழக முதலமைச்சர் அவர்களும், அவர் ஆட்சியேற்ற பிறகு நம்மை சந்தித்த எல்லா தருணங்களிலும் மற்றும் மாநாட்டிலும் அவர்கொடுத்த வாக்குறுதிகளை புறந்தள்ளாமல் தான் கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவில்லை மறுக்கவில்லை மறைக்கவில்லை என்றும் அவை அனைத்தும் தன்னுடைய நினைவில் உள்ளதாகவும் அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் உறுதிபடுத்தி வந்திருக்கிறார். தமிழக முதல்வர் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் நமக்கான வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றாதது நம்முடைய வேதனைகளையும், கோபங்களையும் கொழுந்துவிட்டு எரியச் செய்த நிலையில் நாம் இதுவரை இரண்டுமுறை போராட்ட களங்களுக்கு தயாரான போது அமைச்சர்களை அனுப்பி தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி "சிலகாலம் காத்திருங்கள் நிச்சயம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் " என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்து வந்திருக்கிறார்.*

*அதன்பிறகும் சிலகாலம் முதல்வரின் உறுதிமொழியில் இருந்த நம்பிக்கைகளின் பேரில் பொறுமையுடன் காத்திருந்துவிட்டு அரசுத்தரப்பில் எந்த சலனமும் இல்லாத நிலையில் நாம் நம்முடைய கோரிக்கைளில் அதிமுக்கியத்துவமும். அவசியமும் வாய்ந்த பத்து கோரிக்கைகளை முன் வைத்து இப்போது போராட்டகளத்திற்கு தயாராகி வந்தோம். இந்த நிலையில் அரசாங்கத்தின் துாதுவர்களாக மாண்புமிகு அமைச்சர்கள் திரு.எ.வ.வேலு, திரு.முத்துசாமி மற்றும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை தமிழக முதல்வர் பேச்சு வார்த்தைக்காக நியமித்து அவர்களுடனான பேச்சுவார்த்தை ஜாக்டோ ஜியோவின் முக்கியத் தலைவர்களுடன் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது. தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளை ஒருபோதும் ஒதுக்கித் தள்ள விரும்பியதில்லை என்றும். தற்போதுள்ள நிதி பற்றாக்குறை சூழ்நிலை காரணமாக கோரிக்கைகள் அறிவிக்கப்படாமல் உள்ளதாகவும், நம்முடைய போராட்டங்கள் நியாயமானவையே என்றாலும் அரசாங்கத்தினால் அவற்றை உடனடியாக நிறைவேற்ற இயலாத நிலைமை உள்ளதால் போராட்டங்களை விலக்கிக் கொண்டு இன்னும் சிலகாலம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.* *ஆனால் நாம் நம்முடைய கோரிக்கைகளில் ஒரு சிலவற்றையேனும் முதல்வர் பரிசீலித்து ஆணையிடுவாரேயானால் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பது குறித்தோ அல்லது சிலகாலம் காத்திருப்பது குறித்தோ முடிவெடுக்க இயலும் என்று தெரிவித்தோம். அனைத்து ஊழியர்களும் ஆசிரியர்களும் பணியாளர்களும் அரசின் தற்போதைய நிலைப்பாட்டை வெகுகாலம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் நாங்கள் ஒற்றுமையுடனும், பொறுமையுடனும் பொறுப்புடனும் முதல்வரின் வார்த்தைகளை மதித்து இதுகாலம்வரை காத்திருக்கிறோம் என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்தோம். நம்முடைய பொறுமைகளை புரிந்து கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் மாண்புமிகு முதலமைச்சரிடம் இதுகுறித்து தெரிவிப்பதாகவும் சொல்லிச் சென்றனர்.*

*ஆனால் நம்முடன் சுமூகமாக பேசிச்சென்றதற்கு மாறாக மாண்புமிகு அமைச்சர் திர

*ஆனால் நம்முடன் சுமூகமாக பேசிச்சென்றதற்கு மாறாக மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பெயரில் வெளியான அறிக்கை ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்தை கொச்சை படுத்துவது போன்றும், அரசாங்கம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருவதான தோற்றத்தையும், தமிழ்நாடு மிக இக்கட்டான பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஜியோ அதிகப்படியான பணப்பலன்களைக் கேட்டு போராடுவது சரியானதல்ல என்று பொதுமக்களை திசை திருப்பும் வகையிலும் இருந்ததால் அந்த அறிக்கையை நாம் முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்து போராட்டம் தொடரும் என்று அறிவித்தோம்.*

*நம்முடைய போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மீண்டும் மாண்புமிகு அமைச்சர்கள் நம்முடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். நாம். "முதல்வர் எங்களுடன் பேச வேண்டும். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்திடும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எத்தனை நாட்கள்/மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் என்பதை தெரிவிப்பதன் அடிப்படையிலேயே எங்களுடைய போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெறுவது குறித்து முடிவு செய்ய இயலும். அதனால் முதல்வருடன் நேரடியாக பேசாமல் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதற்கான அறிவிப்பை வெளியிடமுடியாது" என்று தெரிவித்தோம்.* *மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தமுறையும் நம்முடைய கோரிக்கைகளை அவற்றில் உள்ள நியாயங்களை. அவற்றை நிறைவேற்றுவதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள காலதாமதங்களை மறுக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் அதே சமயம் இன்னும் எத்தனை காலம் பொறுமையுடன் காத்திருப்பது என்பதுதான் நமக்குள்ள பெரிய கேள்வியாக உள்ளது. அமைச்சர் பெருமக்கள் அனைவரிடமும் ஏதாவது காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். நாங்கள் உங்களுடைய கோரிக்கைகளில் நிறைவேற்றுவதில் மனம் உள்ளவர்களாக இருப்பதால்தான் பேச்சு வாரத்தைக்கு உங்களை அழைத்திருக்கிறோம் என்றும் அரசாங்கம் தற்போது பல்வேறு வகையான நிதிச்சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கு. ஆசிரியர்களுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் அளிக்கவே நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், மத்திய அரசும் பல வகைகளில் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளை தராமல் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுப் போராடுவதால் எந்தப்பலனும் ஏற்படப்போவதில்லை. தமிழக முதல்வருக்கு கொடுக்க மனமிருந்தும் கஜானாவில் பணமில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் முதல்வருடன் நாம் பேச ஏற்பாடு செய்வதாகக் கூறி ஏற்பாடு செய்து கொடுத்தனர்.*

*மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் நம்மை சந்திக்க அழைக்க, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருடனும் அவர் பேசினார். நிதிநிலைமை மிகக்கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று சொன்ன முதல்வர் உங்கள் கோரிக்கைகளை நான் நிறைவேற்றாமல் யார் நிறைவேற்றப் போகிறார்கள்? என்று கேட்டு மீண்டும் ஒருமுறை அவர் தேர்தல் அறிக்கையிலும், நமது மாநாட்டிலும் தெரிவித்த உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். நாமும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் சில அறிவிப்புகளையேனும் வெளியிட வேண்டும். வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம் என்று தெரிவித்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்களும் "பரிசீலிக்கிறேன்." என்று சொல்லிச் சென்றார். அவருடனான பேச்சு வார்த்தை மிகவும் நம்பிக்கைத் தரும் விதத்தில் அமைந்திருந்ததால் 15.02.2024ல் நடத்தவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஒருமனதாக முடிவு செய்து திரும்பப் பெறுவதாக அறிவித்தோம். சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியாகும் வரும் அறிவிப்பு அதன்பிறகான தமிழக அரசின் நிலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போராட்டத்தை தொடர்வதென முடிவு செய்திருந்தோம்.* *ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டு முன்று அமைச்சர்களுடன் பேசிவிட்டு அவர்கள் கொடுத்த அறிக்கை நமக்கு திருப்தி அளிக்காத நிலையில் நாம் அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டு போராட்டத்தை தொடர்வதாக அறிவித்ததும் அதன்பிறகு மாண்புமிகு அமைச்சர்கள் நம்மை முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து முதல்வரின் வாய்மூலம் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்ததும் நம்பிக்கையை விதைப்பதாக இருந்தன. பொதுவாக அரசுக்கெதிரான போராட்டங்களை யார் செய்தாலும், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் முதன்முறையாக நாம் நிதியமைச்சரின் அறிக்கைக்குப் பின்னரும் போராட்டம் தொடரும் என அறிவித்து அது நிலுவையில்

*ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டு முன்று அமைச்சர்களுடன் பேசிவிட்டு அவர்கள் கொடுத்த அறிக்கை நமக்கு திருப்தி அளிக்காத நிலையில் நாம் அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டு போராட்டத்தை தொடர்வதாக அறிவித்ததும் அதன்பிறகு மாண்புமிகு அமைச்சர்கள் நம்மை முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து முதல்வரின் வாய்மூலம் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்ததும் நம்பிக்கையை விதைப்பதாக இருந்தன. பொதுவாக அரசுக்கெதிரான போராட்டங்களை யார் செய்தாலும், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் முதன்முறையாக நாம் நிதியமைச்சரின் அறிக்கைக்குப் பின்னரும் போராட்டம் தொடரும் என அறிவித்து அது நிலுவையில் இருக்கும்போதே போராட்ட அறிவிப்பை திரும்பப் பெறாமல் முதல்வரை சந்தித்து அவரின் உறுதிமொழிக்குப் பின்னர் ஒருநாள் தற்றகாலிக வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதோடு காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது இந்த இயக்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். நம்முடைய ஒற்றுமை, விடாமுயற்சி. கொண்ட லட்சியத்தில் உறுதிப்பாடு போன்றவைதான் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று நம்முடைய உரிமைகளை மீளப்பெற வழிசெய்யும்.* *அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் நம்மை உதாசீனப்படுத்திவரும் நிலையில் வேறு எந்த கட்சியும் ஆட்சியும் நம்முடைய கோரிக்ககைள நிறைவேற்ற முன்வராத சூழ்நிலையில் நமக்கான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அன்று சொன்ன வார்த்தைகளை இன்றுவரை சொல்லிவரும் திராவிட முன்னேற்றக் கழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித்தரமுடியும் என்ற நம்பிக்கை மீண்டும் மலர்ந்துள்ளது.*

*நாம் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் காத்திருங்கள் கொடுக்கிறோம் என்று தெரிவிக்கும் இடத்தில், 'முடியாது நாங்கள் போராடியே தீருவோம் என்று எதிர்ப்பாடான நிலை எடுத்து போராட்டத்தை தொடர்வது முறையானதாக இருக்காது என்கிற யதார்த்தத்தை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். தமிழக அரசியல்கட்சிகளில் திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் நமக்கான உரிமைகளை நிறைவேற்றித்தருவோம் என்று ஒரு பேச்சுக்குக் கூட கூறாத நிலையில் "காத்திருங்கள் நான் செய்யாமல் உங்களுக்கு யார் செய்யப் போகிறார்கள்." என்று கூறும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பினை எதிர்த்து நாம் போராட்டகளம் செல்வதானது நமக்காக திறந்திருக்கும் வாய்ப்பு வாசல்களை நாமே அடைத்துவிட்டதாக ஆகிவிடும். மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே அரசின். தமிழக முதலமைச்சரின் நம்பிக்கை வார்த்தைகளை ஏற்று சில கோரிக்கைகளாவது கூடியவிரையில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுததி வைத்திருந்தோம். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரும் முடிந்திருக்கிறது.* *கனத்த இதயத்தோடு நிற்கிறோம். முதலமைச்சரின் வார்த்தைகளிலும், உடல்மொழியிலும் நம்மை ஏமாற்றும் போக்கோ. வஞ்சிக்கும் எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை. ஒரு பாராளுமன்றத் தேர்தலை எதிரில் வைத்துக்கொண்டு முதல்வர் தன்னுடைய உறுதிமொழிகளை தள்ளிப்போடுவதோ. இல்லையென்று கைவிரிப்பதோ அவர் வகிக்கும் பதவிக்கும் அவருக்கு இருக்கும் பெயருக்கும் புகழுக்கும் அழகாக இருக்காது என்பதை அவர் உணராதவர் இல்லை. இதுவரை அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் இப்போது கொடுத்திருக்கும் உறுதிமொழிக்கும் வித்தியாசங்கள் பெரிதாக இல்லாத நிலையில் அவரின் வாக்குறுதிகளின் பேரில் பெரிய அளவில் சந்தேகம் எழவில்லை. கூடிய விரைவில் பட்ஜெட்உரை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் எதுவும் தரவில்லை என்பதற்காக நாம் உடனடியாக ஒரு போராட்டத்தை அறிவிப்பது உளமாற நலமாக இருக்காது. கூடிய விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரக்கூடிய நிலையில் கடைசியாக ஒருமுறை நாம் நம்முடைய போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்போம். இப்படி நாம் முடிவெடுப்பதால் நம்முடைய போராட்டங்கள் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. சேமித்து வைத்த சக்திகளை வீணடிக்காமல் பாதுகாத்து வைப்போம்.கொடுத்த வாக்குறுதிகள் நீர்த்துப்போனால் மீண்டும் போராட்டத்தை தொடரும் நிலைப்பாட்டில் ஒற்றுமையாக உறுதியாக இருப்போம். புறச்சூழல்களை கவனத்துடன் கண்காணிப்போம். எப்போது போராட்டம் என்றாலும் அதற்கான தயாரிப்புகளோடு தயாராக இருப்போம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் பணியாளர்கள் குறித்தான தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து கொள்கை முடிவினை அறிவிக *கனத்த இதயத்தோடு நிற்கிறோம். முதலமைச்சரின் வார்த்தைகளிலும், உடல்மொழியிலும் நம்மை ஏமாற்றும் போக்கோ. வஞ்சிக்கும் எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை. ஒரு பாராளுமன்றத் தேர்தலை எதிரில் வைத்துக்கொண்டு முதல்வர் தன்னுடைய உறுதிமொழிகளை தள்ளிப்போடுவதோ. இல்லையென்று கைவிரிப்பதோ அவர் வகிக்கும் பதவிக்கும் அவருக்கு இருக்கும் பெயருக்கும் புகழுக்கும் அழகாக இருக்காது என்பதை அவர் உணராதவர் இல்லை. இதுவரை அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் இப்போது கொடுத்திருக்கும் உறுதிமொழிக்கும் வித்தியாசங்கள் பெரிதாக இல்லாத நிலையில் அவரின் வாக்குறுதிகளின் பேரில் பெரிய அளவில் சந்தேகம் எழவில்லை. கூடிய விரைவில் பட்ஜெட்உரை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் எதுவும் தரவில்லை என்பதற்காக நாம் உடனடியாக ஒரு போராட்டத்தை அறிவிப்பது உளமாற நலமாக இருக்காது. கூடிய விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரக்கூடிய நிலையில் கடைசியாக ஒருமுறை நாம் நம்முடைய போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்போம். இப்படி நாம் முடிவெடுப்பதால் நம்முடைய போராட்டங்கள் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. சேமித்து வைத்த சக்திகளை வீணடிக்காமல் பாதுகாத்து வைப்போம்.கொடுத்த வாக்குறுதிகள் நீர்த்துப்போனால் மீண்டும் போராட்டத்தை தொடரும் நிலைப்பாட்டில் ஒற்றுமையாக உறுதியாக இருப்போம். புறச்சூழல்களை கவனத்துடன் கண்காணிப்போம். எப்போது போராட்டம் என்றாலும் அதற்கான தயாரிப்புகளோடு தயாராக இருப்போம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் பணியாளர்கள் குறித்தான தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டுமென ஜாக்டோ-ஜியோ கேட்டுக்கொள்கிறது.*

*தங்கள் நம்பிக்கையுள்ள*

*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*

24.2.24 Jactto-Geo Press News CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.