கர்நாடகாவில், பள்ளி மாணவர்களை, 'செப்டிக் டேங்க்' சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
கோலார் மாவட்டம், மாலுாரின் யலுவஹள்ளியில் மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், விடுதியில் தங்கி உள்ளனர்.
சில நாட்களுக்கு முன், இப்பள்ளி வளாகத்தில், 'செப்டிங் டேங்க்'கை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா, வார்டன் மஞ்சுநாத் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
பின், சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தால், மாணவர்களை, ஆசிரியர் அபிஷேக் பிரம்பால் அடிக்கும் வீடியோவும் பரவியது. அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.