அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி அறிக்கை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 25, 2023

அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி அறிக்கை வெளியீடு



அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி அறிக்கை வெளியீடு

*DRPGTA 25.10.23*

*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*239/2017*

*4%அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாண்புமிகு* *தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த* *நன்றிகள் பல*

அனுப்புநர்:-
ஆ .இராமு ,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
பெறுநர் :-
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை 9.
ஐயா,
பொருள்:-
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 42 சதவீதமாக உள்ள அகவிலைப் படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் தமிழ்நாடு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் இன்றைய அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளதையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

இந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து இந்த உயர்வினை 01.07. 2023 முதல் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் .

இதன்படி தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப் படியை உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல் படுத்திடும் என்று கடந்த மே 2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது இன்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதற்கும் எங்களது மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

மேலும் 2019 க்கு பிறகு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அமுல்படுத்திய அதே தேதியில் தற்போது தான் முதல்முறையாக தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அமல்படுத்தி இருக்கிறது.

இது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் மகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் கனிவோடு பரிசீலனை செய்து வரும் ஆண்டுகளில் எந்த தேதியில், எந்த மாதத்தில் இருந்து பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் . மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருப்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் .

பேரறிஞர் அண்ணா காலத்தில் கொண்டு வரப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,

2004-2006 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்த பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளையும் தாங்கள் தலைமையிலான அரசு விரைந்து நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் பிறந்திருக்கிறது .

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கண்ட எங்களது கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்

இப்படிக்கு
ஆ.இராமு,
மாநிலத் தலைவர், நேரடி நியமனம் பெற்ற முதுகலைபா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் , DRPGTA
சென்னை
25.10.23

நகல்:-
மாண்புமிகு
தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம்,
சென்னை-9

மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை 9.
மதிப்புமிகு
முனைவர். க அறிவொளி அவர்கள்,
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை 6.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.