வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 24, 2023

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை கண்காணிக்க 34 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தொடக்க கல்வித்துறையில் 2019-2020 மற்றும் 2021-2022ம் ஆண்டுகளில் ஏற்பட்ட 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம், செப்டம்பர் 10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகிறது. இந்த தேர்வில் பங்கேற்க 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இவர்களுக்காக 131 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த 34 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி- செங்கல்பட்டு, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி-திருவள்ளூர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணி-சென்னை, சமக்ர சிக்‌ஷா கூடுதல் இயக்குநர் உமா-காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். www.kalviseithiofficial.com மீதம் உள்ள 30 மாவட்டங்களுக்கான அதிகாரிகள் பட்டியல் அந்தந்த அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.