1,2,3 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 31 ஆம் தேதி எழுத்துத் தேர்வு - SCERT - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 20, 2023

1,2,3 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 31 ஆம் தேதி எழுத்துத் தேர்வு - SCERT



1,2,3 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 31 ஆம் தேதி எழுத்துத் தேர்வு - SCERT

ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கட்டகம் - 5 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (21-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். இனி வரும் வாரங்களில் மீதமுள்ள அனைத்து கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வார காலத்திற்கு நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும். கட்டகம் - 6 க்கு வளரறி மதிப்பீடு ஆ இல்லை.

ஜூலை மாதம் 31 ஆம் தேதி முதல் கட்டகம் - 3, கட்டகம் - 4 ,கட்டகம் - 5,கட்டகம் - 6 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு - எழுத்துத் தேர்வாக வைக்க வேண்டும். இதற்கான வினாத்தாள் நம்முடைய செயலியில் ஜூலை மாதம் 30-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் pdf வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.

அதை நகல் எடுத்துக்கொண்டு ஜூலை 31ஆம் தேதி முதல் மாதாந்திர எழுத்துதேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

நன்றி - SCERT

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.