தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 18, 2023

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு Tamil Nadu govt employees to get increase in dearness allowance soon

தமிழகத்தில் அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அகவிலைப்படி: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி கடந்த மே மாதம் 4% உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

தற்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42% உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களின் ஊதியமும் வெகுவாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக அகவிலைப்படி எப்போது உயரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜூன் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விரைவில் அகவிலைப்படி குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன் படி அகவிலைப்படி மே மாதத்தை போலவே 4% உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்கள் மொத்தமாக 48% அகவிலைப்படி பெறுவார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.