திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது - தீர்ப்பு நகல் - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 9, 2023

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது - தீர்ப்பு நகல் - PDF



It is not a crime for an unmarried man and woman to stay in the same room - Judgment Copy - PDF

*திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது*

*திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது* *குற்றமாகாது என சென்னை உயர் நீதிமன்றம்* *தெளிவுபடுத்தியுள்ளது *கோயம்புத்தூரில் ஒரு தனியார் தங்கும் விடுதி ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி* *மூடப்பட்டது. இந்த தனியார் விடுதியில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டில்கள் இருந்ததாலும் இந்த விடுதிக்கு போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரால்* *சீல் வைக்கப்பட்டது.* *இதனை எதிர்த்து* *ஹரியானாவை சேர்ந்த அந்த விடுதி நிர்வாகம் சார்பில் சென்னை* *உயர்நீதிமன்றத்தில்* *வழக்கு தொடரப்படது.*

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு* *விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு விடுதி நிர்வாகத்திடம் எந்த விளக்கமும் கேட்காமல் சீல் வைத்தது இயற்கை நீதிக்கு எதிரானது என நீதிபதி* *கருத்து தெரிவித்தார்.* *இந்த விடுதியில்* *நடைபெற்ற சோதனையின் போது ஒரு* *திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கி இருந்ததாகவும், மது விற்பனைக்கான உரிமம் பெறாத நிலையில் வேறொரு அறையில் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாலேயே சீல் வைத்ததாக* *காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.* காவல்துறையினரின் இந்த விளக்கத்தை ஏற்காத நீதிபதி, திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என சட்டம் ஒன்றும் இல்லாத நிலையில், திருமணமாகாத இருவரும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு* *இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.*

*அதேபோல* *திருமணமாகாத ஆணும் பெண்ணும் ‘லிவிங் டூ கெதர்” முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ* *அதேபோல், இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என தெளிவு படுத்தினார்.* *அத்துடன் இந்த விடுதியின் அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு மதுபான சட்டப்படி, தனி நபர் ஒருவர்,* *இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- 4.5 லிட்டர்* *வெளிநாட்டு மதுபானம்- *4.5 லிட்டர்* *பீர் -7.8 லிட்டர்* *9 -லிட்டர் ஒயின்’ என வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளதை* *சுட்டிக்காட்டி விடுதியில் மதுபான பாட்டில்கள் இருந்தது குற்றமில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.* *மேலும் இந்த விடுதியை மூடும்போது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றாததல், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்*

CLICK HERE TO DOWNLOAD COURT JUDGEMENT PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.