தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு உழைப்பூதியம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 20, 2023

தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு உழைப்பூதியம்

தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு உழைப்பூதியம்

இராமநாதபுரம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் அக்டோபர் 2022 தமிழ்மொழி - இலக்கியத் திறனறிவுத் தேர்வு - தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் உழைப்பூதியம் செலவினத் தொகை ECS மூலம் ஒப்பளித்தமைக்கான விவரம் தெரிவித்தல் -தொடர்பாக.

நடைபெற்று முடிந்த தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2022 -க்கான தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் செலவினத் தொகை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள தேர்வு மைய தலைமையாசிரியர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை சம்பந்தப்பட்ட முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்குறிப்பிட்ட உழைப்பூதியத் தொகையினை தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கையை முதன்மைக் கண்காணிப்பாளர்கள் உடன் மேற்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.