முதுநிலை நீட் தோ்வு: 2 லட்சம் போ் பங்கேற்பு
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் இதில் சுமாா் 2 லட்சம் போ் பங்கேற்றனா். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் இத்தோ்வை எழுதினா்.
இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்டி, எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளமோ ஆகிய மருத்துவ மேற்படிப்புகளுக்கு 42,500-க்கும் அதிகமான இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இதற்கான நீட் தோ்வை தேசிய தோ்வுகள் வாரியம் (என்டிஏ) நடத்துகிறது. 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும், நாடு முழுவதும் 277 நகரங்களில் 900-க்கும் மேற்பட்ட மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை இணையவழியில் நடைபெற்றது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த 25 ஆயிரம் போ் உள்பட நாடு முழுவதும் 2.09 லட்சம் போ் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அதில் சுமாா் 2 லட்சம் போ் தோ்வில் பங்கேற்றனா். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் தோ்வெழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோ்வு மையங்களில் கைப்பேசி, புளூடூத், புத்தகம், பேனா, கைப்பை உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று காதணி, கைக் கடிகாரம், கை வளையல்கள், பெல்ட் உள்ளிட்டவை அணிந்து வரவும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், தோ்வா்கள் அனைவரும் சோதனைக்குப் பின்னரே மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அனைத்து தோ்வு மையங்களிலும் கைப்பேசி செயல்பாட்டை முடக்கும் கருவி (செல்போன் ஜாமா்) அமைக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தோ்வு கண்காணிக்கப்பட்டது. தோ்வு முடிவுகள் வரும் 31-ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளன. அதன் பின்னா், கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் இதில் சுமாா் 2 லட்சம் போ் பங்கேற்றனா். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் இத்தோ்வை எழுதினா்.
இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்டி, எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளமோ ஆகிய மருத்துவ மேற்படிப்புகளுக்கு 42,500-க்கும் அதிகமான இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இதற்கான நீட் தோ்வை தேசிய தோ்வுகள் வாரியம் (என்டிஏ) நடத்துகிறது. 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும், நாடு முழுவதும் 277 நகரங்களில் 900-க்கும் மேற்பட்ட மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை இணையவழியில் நடைபெற்றது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த 25 ஆயிரம் போ் உள்பட நாடு முழுவதும் 2.09 லட்சம் போ் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அதில் சுமாா் 2 லட்சம் போ் தோ்வில் பங்கேற்றனா். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் தோ்வெழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோ்வு மையங்களில் கைப்பேசி, புளூடூத், புத்தகம், பேனா, கைப்பை உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று காதணி, கைக் கடிகாரம், கை வளையல்கள், பெல்ட் உள்ளிட்டவை அணிந்து வரவும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், தோ்வா்கள் அனைவரும் சோதனைக்குப் பின்னரே மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். அனைத்து தோ்வு மையங்களிலும் கைப்பேசி செயல்பாட்டை முடக்கும் கருவி (செல்போன் ஜாமா்) அமைக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தோ்வு கண்காணிக்கப்பட்டது. தோ்வு முடிவுகள் வரும் 31-ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளன. அதன் பின்னா், கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.