பொதுத்தேர்வு - வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 13, 2023

பொதுத்தேர்வு - வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வெளியீடு.

பொதுத்தேர்வு - வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வெளியீடு

மேல்நிலை இரண்டாமாண்டு . முதலாமாண்டு , பத்தாம்வகுப்பு மற்றும் இத்துறையால் நடத்தப்படும் இதர தேர்வுகள்- வழித்தட அலுவலர்களுக்கான உழைப்பூதியம் நிர்ணயம் செய்து ஆணை வழங்குதல் தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.

வழித்தட அலுவலர்களுக்கென தனியாக உழைப்பூதியம் நிர்ணயம் செய்யப்படாததால் , இதுநாள் வரை பறக்கும் படை அலுவலர்களுக்கான உழைப்பூதியத் தொகையே வழித்தட அலுவலர்களுக்கு உழைப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மார்ச் 2023 முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் அனைத்து பொதுத் தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகள் தொடர்பாக பணியாற்றும் வழித்தட அலுவலர்களுக்கு உழைப்பூதியமாக நாள் ஒன்றுக்கு ரூ .130. ( ரூபாய் நூற்று முப்பது மட்டும் ) என நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.