தொழிற்பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் புதுப்பிக்க வருகின்ற 28ம் தேதி கடைசி நாள்: கலெக்டர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 21, 2023

தொழிற்பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் புதுப்பிக்க வருகின்ற 28ம் தேதி கடைசி நாள்: கலெக்டர் தகவல்

தொழிற்பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் புதுப்பிக்க வருகின்ற 28ம் தேதி கடைசி நாள்: கலெக்டர் தகவல் - 28th is the last day for starting vocational schools and renewing their accreditation: Collector Information

திருவள்ளூர் மாவட்டத்தில் 2023 - 24 -ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஜனவரி மாதம் 2 - ம் தேதி முதல் http:skilltraining.tn.go.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023 - 24 ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம், ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணம் ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். வருகிற 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், அங்கிகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் http:skilltraining.tn.go.in/ என்ற இணையதளம் மூலமும், 044 - 22501006 மற்றும் 22501113 என்ற தொலைபேசி எண்ணிகளிலோ அல்லது detischennai@gmail.com என்ற இ - மெயில் ஐடி மூலம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.