மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 16, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு விரைவில் கழியர்களுக்கு அகவி லைப்படி 4 சதவீதம் வரை ஜனவரி மாதத்தில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது,

ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளி விவரங்களில் மிகப் பெரிய வளர்ச்சி காணப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அதன்படி, ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

தற்போது மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் வழங்கப்படுகிறது.

இது 42 சதவீதம் வரை அதிகரிக்கலாம். அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்ளின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 720 ஆகவும், அதிகபட்ச சம்பளம் மாதம் ரூ.2,276 ஆகவும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.