இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 28, 2022

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமைகளில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இதைதொடர்ந்து இன்று தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வு நடத்த உள்ளன. இதில் பட்டதாரிகள், (பிஇ உள்பட), டிப்ளமோ, ஐடிஐ, 12, 10ம் வகுப்பு படித்தவர்கள், வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணிக்கு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூறப்பபட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.