ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி கற்பித்தல் பணியைப் பாதிக்கும்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 11, 2022

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி கற்பித்தல் பணியைப் பாதிக்கும்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து

ஆசிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி கற்பித்தல் பணியைப் பாதிக்கும் செயல், இது தேசிய கல்விக் கொள்கையின் உட்கூறு என தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் தொடக்கக் கல்வியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு அளவுக்கு அதிகமாகப் பயிற்சிகள் வழங்குவதைக் கைவிட்டு ஆசிரியர் களை முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட யுள்ளது. அனுமதிக்க வேண்டும், பயிற்சி தொடர்பாக ஊடகங்களில் ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் தவறான செய்திகள் வெளியிடப்படு வதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் உடனடியாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொள்கிறது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021-22ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி மாணவர்களின் கற்றல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் 2 மாதங்கள் மட்டுமே இதுவரை வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் நடைபெற்றுள்ளது. தற்போது மாணவர்களை வகுப்பறைச் சுழலுக்குக் கொண்டு வரும் ஆயத்தப் பணிகளே பெரும்பாலும் நடை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்துவகை பள்ளிகளும் திறக்கப் வேண்டும். பட்டுக் கற்றல், கற்பித்தல் பணிகள் நடை பெற்று வருகின்றன. ஏற்கனவே கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி முடிய | முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி நடத்தப்பட்டது. குடிப்பதற்கு 'தண்ணீர்' கூட கொடுக்காத பயிற்சி என்று பெயர் பெற்ற அப்பயிற்சி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 9.2.22 முதல் 9.4.22 வரை 2 மாத காலம் எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி' என்ற பெயரில் இணைய வழியில் பயிற்சி அளிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பயிற்சியின் மீது சலிப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தி இந்த கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இன்னும் 2 மாத காலம் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், ஆசிரியர்கள் பயிற்சியில் இருப்பது கற்பித்தல் பணியை பாதிக்கும் என்ற உண்மையை ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் உணர வேண்டும்.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள 'எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு அ, ஆ தெரியுமா? கூட்டல் கழித்தல் தெரியுமா? என்பதை சோதிக்கும் பயிற்சி என ஊடகங்களில் வெளியாகும் செய்தி கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் காட்டுகிறது. கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த பயிற்சியின் நோக்கம், காரணம், பயிற்சிக்கான பாடப்பொருள் ஆகியவை பற்றி மாநில திட்ட இயக்ககம் தெளிவான விளக்கத்தை அளிக்க ஆரம்பப்பள்ளியில் புதிதாகச் சேரும் மாண வர்கள் தான் எண்ணும் எழுத்தும் தெரியாத வர்கள். அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மெத்தப்படித்தவர்கள், பெரும்பாலும் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்ற வர்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பயிற்சியில் ஒவ்வொரு கட்டத்தின் முடிவி லும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கொள்குறிவகை வினா மூலம் தேர்வு நடத்தப்படும். அத்தேர்வில் வெற்றி பெற்றவர்க ளுக்கு சான்றும், பயிற்சிக்கான செலவும் வழங்கப்படும் எனவும் மாநில திட்ட இயக்ககம் அறிவித்திருப்பது ஆசிரியர்களை வேதனை யடையச் செய்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்க ளின் கற்றல் அடைவை அறிய வகுப்பறைகளில் பல சோதனைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் களுக்கே சோதனையா? அல்லது வேதனையா? என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்குத் தேர்வு என்ற இந்த அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறுகிறவர்க ளுக்குச் சான்று வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சி அடையும் வரை தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சிக்கான செலவினம் வழங்கப்படும் என்பதும் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் உட்கூறுகள் என்ப தையும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக் தேசிய கல்விக் கொள்கையை படிப்படி யாக நுழைக்கும் இதுபோன்ற செயல்கள் தொடங் குமானால் அதை எதிர்த்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி களத்தில் இறங்கி போராடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.