பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி - உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 9, 2026

பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி - உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு



பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி - உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு - High Failure Rate Among 'Scribe' Students in Plus 2 Exams — Setback Attributed to Graduate Teachers Serving as Assistants

பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்களுக்கு இந்தமுறை முதுநிலை ஆசிரியர்களுக்குப் பதிலாக பட்டதாரி ஆசிரியர்களை உதவியாளராக அமர்த்தி தேர்வை எழுத வைத்ததால் பெருமளவு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு பொதுத்தேர்வுகளில் பார்வைத்திறன் குறைபாடு, சிந்தனைக் குறைபாடு மற்றும் விபத்து காரணமாக கை பாதித்து எழுத முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆசிரியர் களே ஸ்கிரைப் உதவியாளர் களாக இருந்து தேர்வை எழுதுகிறார்கள்.

ஸ்கிரைப் ஆசிரியர்கள், மாணவர்கள் சொல்வதை மட்டுமே தேர்வில் எழுத வேண்டும். மாற்றுத் திறனாளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்கள் எழுதும் பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்களே கடந்த ஆண்டுவரை பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

குறைந்தபட்சம் மாணவர் எழுதும் பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், மற்ற பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்களையாவது நியமிப் பார்கள். பெரும்பாலும் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள், முறையாக படித்துவிட்டும், கேள்விகளைப் புரிந்து விடை களைச் சொல்லும் சிந்தனைக் குறைபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அதனால் மாணவர்கள் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் தெரியாவிட்டாலும், அவர்கள் சரியாகப் படிக்காமல் வந்தாலும், ஆசிரியர்களே அதனைச் சமாளித்து தேர்வு எழுதி அந்த மாணவர்களை வெற்றிபெற வைத்துவிடுவர்.

ஆனால், நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், ஸ்கிரைப் மாணவர்களுக்கு அவர்கள் பாடப்பிரிவுக்கான முதுநிலை ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக போடாமல், பத்தாம் வகுப்புக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக நியமித்தனர்.

அவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு பாடத்துக்கான கேள்விகளுக்கு விடைகள் முழுமையாக தெரியாது. அந்தப் பாடத்திட்டத்துக்கான முழுமை யான புரிதலும் இருக்காது. மாற்றுத் திறனாளிகள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே ஸ்கிரைப் ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதுவார்கள்.

அவர்களே சிந்தித்து விடைகளை எழுத மாட்டார்கள். பல மாணவர் கள் வழக்கம்போல் படிக்காமல், தேர்வுக்குத் தயாராகாமல் வந்ததால் அவர்கள் இந்த முறை தேர்வை சரியாக எழுதவில்லை.

அதனால், நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் ஸ்கிரைப் ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏராளமானோர் தோல்வியடைந்துள்ளனர் மாநகராட்சிப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் தோல்வி அடைந்ததால் அப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முக்கியக் காரண மாகக் கூறப்படுகிறது.


இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகை யில், ‘‘உதாரணமாக பொரு ளியல் பாடத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக அனுப்பி யதால் அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

மாற்றுத் திறனாளி மாணவர்களும் சரியாக படிக்காமலும், படித் ததைச் சொல்லத் தெரியாமலும் இருப்பார்கள். இதற்கு முன்பு பொருளியல் பாடப்பிரிவு ஸ்கிரைப் ஆசிரியர்களே ஸ்கிரைப்பராகச் சென்றதால் மாணவர்களுக்கு மிகவும் துணையாக இருந்து பதில் தேர்வு எழுதி அவர்களைத் தேர்ச்சிபெற வைப்பார்கள்.

சில நேரங்களில் வழக்கமான மாணவர்களைவிட இந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று விடுவார்கள். இந்த முறை பொருளியல் பாடப்பிரிவில் அதிகமான ஸ்கிரைப் மாணவர்கள் தோல்விக்கு, ஸ்கிரைபராக தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரி யர்கள் சென்றதே காரணம்’’ என்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.