அறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் அலைபேசி பயன்பாட்டு உறுதிமொழிச் சான்று ஒப்படைக்க வேண்டும் - DGE செயல்முறைகள்! DGE - Additional Instructions to Chiefs Room Supervisors must submit a mobile phone usage affidavit on every exam day - DGE Procedures!
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மார்ச். 2026. பத்தாம் வகுப்பு மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1 அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள். நிலையான பறக்கும் படையினர் அறைக் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து வகை தேர்வு மையப் பணியாளர்களும். ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தத்தம் கைப்பேசிகளை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்துவிட்டு, இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் உறுதிமொழி சான்றினை பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கவேண்டும். 2. ஒவ்வொரு அறையிலும் அறைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாட்களை தேர்வர்களுக்கு வழங்கியபின், மீதமுள்ள வினாத்தாட்களை அதே உறையினுள்ளிட்டு Cellotape கொண்டு Seal செய்து முதன்மைக் கண்காணிப்பாளர் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். வினாத்தாள் மீதம் ஏதுமில்லாத உறைகளையும் முதன்மைக் கண்காணிப்பாளர் துறை முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்ட அனைத்து உறைகளையும் கட்டாகக் கட்டி அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். மீதமுள்ள வினாத்தாட்களுடன் வழித்தட அலுவலரிடம் தவறாமல் ஒப்படைக்கவேண்டும்.
3. விடைத்தாள் சேகரிப்பு மையங்களின் தொடர்பு அலுவலர்கள் இவ்வாறு பெறப்படும் வினாத்தான் உறைகளிலிருந்து வினாத்தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெற்று உறைகளை தனிக் கட்டுகளாகக் கட்டி அனைத்து தேர்வுகள் முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
👇👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD DGE - Additional Instructions to Chiefs - Proceedings - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.