அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு : தேர்வர்கள் கருத்து Govt College Assistant Professor Recruitment : Candidates Comment
அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 196 மையங்களில் நடைபெற்றது.
மொத்தம் 47,048 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 42,064 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வு எழுதியவர்களின் ஒட்டுமொத்த சதவீதம் 89.40% என்று டிஆர்பி தலைவர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார். தேர்வு மூன்று பகுதிகளாக நடைபெற்றது:
காலை 9.30 முதல் 12.30 மணி வரை: கட்டாய தமிழ் மொழித் தாள் (50 மதிப்பெண்கள்) மற்றும் சம்பந்தப்பட்ட பாடத் தேர்வு (150 மதிப்பெண்கள்).
பிற்பகல் 3 முதல் 4 மணி வரை: பொது அறிவுத் தாள் தேர்வு (50 மதிப்பெண்கள்).
கட்டாய தமிழ் மொழித் தாள் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மற்ற விடைத்தாள்கள் (பாடத்தேர்வு மற்றும் பொது அறிவு கட்டுரைத் தாள்) மதிப்பீடு செய்யப்படும்.
மொத்தம் உள்ள 2,708 காலி இடங்களுக்கு 48 பாடப் பிரிவுகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வர்கள், வினாத்தாள் நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தாலும், மிகவும் கடினமாகவும், முதுகலைப் படிப்பை தாண்டியும் கேள்விகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
அடுத்த கட்டத் தேர்வான நேர்காணலுக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.