ஆசிரியர்கள் கூடுதல் கல்வித் தகுதிக்கான இன்சென்டிவ் ' முரண்பாடுகள் நீக்கப்படுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 10, 2025

ஆசிரியர்கள் கூடுதல் கல்வித் தகுதிக்கான இன்சென்டிவ் ' முரண்பாடுகள் நீக்கப்படுமா?



ஆசிரியர்கள் கூடுதல் கல்வித் தகுதிக்கான இன்சென்டிவ் ' முரண்பாடுகள் நீக்கப்படுமா?

ஆசிரியர்கள் கூடுதல் கல்வித் தகுதிக்கான இன்சென்டிவ் ' முரண்பாடுகள் நீக்கப்படுமா? - 17 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு

'தமிழகத்தில் ஆசிரி யர்கள் கூடுதல் கல்வித் தகுதிக்கு வழங்கப்படும் ஊஊக்க ஊதியத்தில் (இன் சென்டிவ்) உள்ள முரண் பாடுகளை களைய வேண் டும்' என பாதிக்கப்பட்ட 17 ஆயிரம் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆசிரியர், அரசு ஊழியர் களுக்கு கூடுதல்கல்வித்தகு திக்கான 'இன்சென்டிவ் வழங்குவது நடைமுறை யில் உள்ளது. ஆசிரியர்கள் அவர்கள் பணிக்காலத்தில் இரண்டு முறை இச்சலுகை வழங்கப்படும். இதற்கான கூடுதல் தொகை 'இன் சென்டிவ் பெற தகுதியான நாளில் இருந்து அவர்கள் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு, மாதந் தோறும் வழங்கப்படும்.

ஆனால் கொரோனா பேரிடர் காலத்தில் 'இன் சென்டிவ்' சலுகை திடீ ரென ரத்து செய்யப்பட் டது. 10.3.2020 க்கு முன் உயர்கல்வி தகுதி பெற்ற ஆசிரியர் விபரங்கள் 17 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு

அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டு அதில் தகுதி யானவர்களுக்கு வழங் கப்பட்டது. ஆனால் அவர்களுடன் ஒரே கால கட்டத்தில் கூடுதல் தகுதி பெற்ற 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்க காலஅ வகாசம் தரப்படவில்லை என கூறப்பட்டும் தீர்வு இல்லை.

ஆனால் 2020 மார்ச் 10 அல்லது அதற்கு பின் உயர் கல்வி முடித்த ஆசிரியர்க ளுக்கு ஒரே தவணையாக (ஒன் டைம்) 'இன்சென் டிவ்' வழங்கப்பட்டது. இதன்படி 'யு.ஜி.,கல்வி தகுதிக்கு ரூ.15 ஆயிரம், பி.ஜி., தகுதிக்கு ரூ.20 ஆயி ரம், பிஎச்.டி., தகுதிக்கு ரூ.25 ஆயிரம் என வழங் கப்படும்' என அறிவிக் கப்பட்டது. ஆனால் இதி லும் 10.3.2020 க்கு முன் தகுதி பெற்று சலுகை பெறாதவர்கள் சேர்க்கப்ப டவில்லை.

ஒரே தவணை திட்டத்தில் விண்ணப் பித்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இன்னும் காத்திருக்கின்றனர். சில ருக்கு சலுகைக்கான உத் தரவு கிடைத்தும் பணப் பலன் கிடைக்கவில்லை.

இவ்வகையில் 17 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பாதிப்பு உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறிய தாவது: இதுதொடர்பாக சில வழக்குகள் நிலுவை யில் உள்ளன. ஆனாலும் 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 'அ.தி. மு.க., அரசு நிறுத்தி வைத்த ஆசிரியர்களுக் கான ஊக்க ஊதியம் மீண் டும் வழங்கப்படும்' என உறுதியளிக்கப்பட்டது.

இதுவரை நடவடிக்கை இல்லை. இச்சலுகையில் உள்ள முரண்பாடுகளை களைந்து அனைவருக்கும் ஒரே வகையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.