ஆசிரியை கொலை - அதிர்ச்சித் தகவல்கள்
தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி மற்றும் கைதான மதன் குமார் இருவரும் காதலித்து வந்த நிலையில், நேற்று மாலை அவர் ரமணியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டுள்ளார் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ரமணியை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் இன்று பள்ளிக்குள் நுழைந்து கொலை செய்துள்ளார் திருமணத்திற்கு மறுப்பு-வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை.
தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை.
திருமணம் செய்ய விருப்பமில்லை என்றதால் ரமணியை மதன் என்பவர் கத்தியால் குத்தியதாக தகவல்.
பள்ளி வகுப்பறையில் காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார் ரமணி; இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.