நாளை முதல் டிச.23ம் தேதி வரை 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 19, 2023

நாளை முதல் டிச.23ம் தேதி வரை 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை



4 நாட்கள் விடுமுறை!

காரைக்காலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் நாளை முதல் டிச.23ம் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை.

பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநர்.!

டிச.23 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை டிசம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் கூட நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


சனி பெயர்ச்சி நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்டம் மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே போல காரைக்காலில் நாளை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையாக கணக்கிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி பெயர்ச்சி நிகழ்ந்து ஒரு மாதம் வரைக்கும் திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.