ஆசிரியர்கள் நாளை பள்ளி வர உத்தரவு
சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக பள்ளி வர அறிவுறுத்தல் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (08-12-2023) விடுமுறை அறிவிப்பு.
மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை அறிவித்தது தமிழக அரசு.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) வெள்ளிக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (08.12.2023) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.