அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி அறிக்கை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 25, 2023

அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி அறிக்கை வெளியீடு



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றி. இனிய தகவல்கள் தொடருமென்று நம்புகிறோம்.

மத்திய அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்ற போதெல்லாம் தமிழக அரசும் வழங்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். அதன்படி மத்திய அரசு அறிவித்த 4சதவீத அகவிலைப்படி உயர்வினை ஏற்று தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை செலவுகளுக்கு பயன்படும் வகையில் அதனை விரைந்து அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி அக்டோபர் 20ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தோம்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்கோரிக்கையினை ஏற்று, ஏற்கனவே அளித்த வாக்குறுதி படி இன்று(25.10.23) அகவிலைப்படி உயர்வினை 4சதவீதம் உயர்த்தி 46 சதவீதமாகவும், அதன் பலன் 1.7.2023 முதல் முன்தேதியிட்டு கிடைக்குமாறும் அறிவித்துள்ளார்கள். சொன்னதை சொன்னபடி நிறைவேற்றியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடுமையான நிதி நெருக்கடிக்கிடையில் ஆட்சிப் பொறுப்பேற்றது.

ஆட்சி பொறுப்பேற்ற நேரத்திலேயே கொரோனா இரண்டாம் முறையாக நோய் தாக்குதல் என்ற கடுமையான இடர்பாடுகளை சமாளித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்புடன் ஆட்சியை நடத்தி வருகிறார்கள். தற்போது சொன்னபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருப்பது ஆசிரியர்களின் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நம்பிக்கையை தரும் வகையில் அமைந்துள்ளது. இதுபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றி இனிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என நம்புகிறோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீதான நம்பிக்கையோடு கடமையாற்றி காத்திருக்கிறோம். தீபாவளி பண்டிகைக்கு உதவிடும் வகையில் உடனடியாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்றென்றும் நன்றியுடன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.