அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 20.10.2023 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி - SPD PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 12, 2023

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 20.10.2023 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி - SPD PROCEEDINGS



One Day Refresher Training for Higher Education Guide Trained Teachers of All Government Higher Secondary Schools on 20.10.2023 - SPD PROCEEDINGS - அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 20.10.2023 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி - SPD PROCEEDINGS

நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளின் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 20.10.2023 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் சார்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக. உயர்கல்வி வழிக்காட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் நான் முதல்வன் - கல்வியாண்டு 2023 - 2024 க்கான ஓராண்டு செயல்பாட்டு திட்டம் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் கல்வி உதவித் தொகை மற்றும் கல்விக் கடன் குறித்த பல தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, இப்பயிற்சியில் சென்னை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்வதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பொறுப்புகள் : ( சென்னை செங்கல்பட்டு,திருவள்ளூர்)

ஒரு பள்ளியில் 250 மாணவர்களுக்கு 1 உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் என்ற விகித அடிப்படையில் இப்பயிற்சிக்கு ஆசிரியர்கள் பங்கேற்பதை உறுதி செய்தல் வேண்டும். அனைத்து உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்றுநர்களும் காலை 9.00 மணிக்கு பயிற்சிநடைபெறும் அரங்கில் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

கடந்த மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் அனுப்பப்பட்டுள்ளன. எனவே. ஒரு மாணவருக்கு ஒரு புத்தகம் என அனைத்து மாணவர்களும் கிடைக்கப் பெற்றார்களா உள்ளிட்ட தகவல்களோடு பயிற்சிக்கு வருதல் வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம் :

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம், எண் :577 அண்ணா சாலை, சைதாப்பேட்டை,சென்னை-600015.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.