(PM National Apprenticeship Mela 2023) - தேசிய தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் - 2023 - செய்தி வெளியீடு - நாள்: 03.05.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 3, 2023

(PM National Apprenticeship Mela 2023) - தேசிய தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் - 2023 - செய்தி வெளியீடு - நாள்: 03.05.2023

செய்தி வெளியீட்டு எண்.62

தேசியதொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம்-2023

நாள்: 03.05.2023

(PM National Apprenticeship Mela-2023)

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்தியஅரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசியதொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela 2023) வருகிற 08.05.2023 அன்று காலை 9.30 மணியளவில் வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சிநிலையவளாகத்தில் அமைந்துள்ளஅரசினர் தொழிற் பயிற்சிநிலையம், ஆர்.கே.நகர், சென்னை-21ல் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate)வழங்கப்படும். இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி(NAC) முடிக்காத அரசு, தனியார் தொழிற் பயிற்சிநிலையங்களில் தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து, அசல் கல்விசான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.