பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு அனுமதி கோரி ஏப்.16 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 8, 2023

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு அனுமதி கோரி ஏப்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு அனுமதி கோரி ஏப்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) நம்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள், தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அதன்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன. அந்தவகையில் புதிய கல்லூரிகள், படிப்புகள் தொடக்கம் மற்றும் அங்கீகாரம் நீட்டிப்பு ஆகியவை தொடர்பாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றன. இதற்கான அவகாசம் ஏப்.6-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. எனினும், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்.16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெறுதல் மற்றும் நீட்டிப்புக்கான அனுமதி கோரி கல்வி நிறுவனங்கள் தேவையான ஆவணங்களுடன் துரிதமாக விண்ணப்பிக்க அபராதத் தொகையுடன் ஏப். 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.