6 முதல் 9ம் வகுப்பு வினாத்தாளை ‘ஆன்லைனில்’ அனுப்ப முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 13, 2023

6 முதல் 9ம் வகுப்பு வினாத்தாளை ‘ஆன்லைனில்’ அனுப்ப முடிவு

6 முதல் 9ம் வகுப்பு வினாத்தாளை ‘ஆன்லைனில்’ அனுப்ப முடிவு

சென்னை, மார்ச் 14-

அரசு பள்ளிகளில் படிக்கும், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வினாத்தாள்கள், 'ஆன்லைன்' வழியே பள் ளிகளுக்கு அனுப்பி, அங்கிருந்து 'பிரின்ட் அவுட்' எடுத்து, தேர்வெழுத வரும் மாண வர்களுக்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், சோதனை முறையில், இப்படி வினாத்தாள்கள் அனுப்பப் பட உள்ளன.

தேர்வு நடக்கும் நாளுக்கு முந்தைய தினம், பள்ளி வாரியாக தனித்தனியாகக் கேள்விகள் தயாரிக்கப்பட்டு அனுப்ப, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

உள்ளூர் அச்சு இயந்திரத்திலோ, பள்ளியி லேயே அவ்வசதி இருந்தால், அங்கோ 'பிரின்ட் அவுட்' எடுக்கப்பட்டு, தேர்வெழுத பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.