அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 14, 2023

அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது - Govt school teacher hanging suicide-propaganda letter caught



பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது.

அரசு பள்ளி ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 46). இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தணிகையேஸ்வரி (42). இவர் மணலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு தீபன், ரித்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் அருண்பிரசாத், தணிகையேஸ்வரி பள்ளிக்கு சென்றனர். திடீரென அருண்பிரசாத், மணலூருக்கு சென்று, தணிகையேஸ்வரியிடம் வீட்டு சாவியை பெற்றுக்கொண்டு, வீட்டுக்கு திரும்பினார். பின்னர் தணிகையேஸ்வரி செல்போன் மூலம் பலமுறை அழைத்தும், அருண்பிரசாத் போனை எடுக்கவில்லை. தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த தணிகையேஸ்வரி வீட்டுக்கு திரும்பினார். அப்போது அங்கு அருண்பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைப்பார்த்து தணிகையேஸ்வரி கதறி அழுதார். இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அருண்பிரசாத் எழுதிய பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது.

அதில் எனது வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்கும் சென்று வர பொது வழிப்பாதை இருந்தது. அதனை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து, வேலி அமைத்து விட்டார். இதுகுறித்து கேட்டபோது, என்னை மிரட்டினார். அதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளோம் என்று ஆசிரியர் அருண்பிரசாத் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சோகம்

இதையடுத்து அருண்பிரசாத் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பால் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.