20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு நோய் சிகிச்சைகளுக்கான காப்பீடுத்தொகை வழங்குவதற் கான அனுமதி இல்லை.

இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மேற்கொள்ளும் சிகிச்சைகளுக்கு மருத்துவக்காப்பீடு பெற முடியவில்லை. எனவே மருத்துவக்காப்பீடு தொகை பெறுவதற்கான பட்டிய லில் டெங்கு நோய் இடம்பெற வேண்டும். அப்போதுதான் உரிய காப்பீட்டுத்தொகையை பெற முடியும். எனவே முதல்- அமைச்சர் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்களை இத் திட்டத்தில் இணைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாளை (செவ்வாய் கிழமை) முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டமும், வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை கோரிக் கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டமும் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.