உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 18, 2023

உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் You can also apply for boarding schools

பெங்களூரில் உள்ள அரசுக்கு சொந்தமான உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்களின் சங்கத்துக்கு சொந்தமான பெங்களூரில் உள்ள மொராா்ஜி தேசாய், கித்தூா் ராணி சென்னம்மா உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பள்ளிகளில், 2023-24-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சேர வாய்ப்புள்ளது. இதில் சேருவதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம். இதுதவிர, சம்பந்தப்பட்ட மொராா்ஜி தேசாய், கித்தூா் ராணி சென்னம்மா பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூா்த்திசெய்த விண்ணப்பங்களை மொராா்ஜி தேசாய் பள்ளி (அடகமாரனஹள்ளி), கித்தூா் ராணி சென்னம்மா பள்ளியில் (தெலகரஹள்ளி) நேரில் அளிக்கலாம்.

இதற்கு வாய்ப்பில்லாதவா்கள் புகைப்படங்களுடன் மின்னஞ்சலுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 90082 24304, 81233 28962, 90355 09282 ஆகிய கைப்பேசி எண்களில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.