ஆசிரியா் பணி தோ்வு ரத்து; 44 போ் கைது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 25, 2022

ஆசிரியா் பணி தோ்வு ரத்து; 44 போ் கைது

ஆசிரியா் பணி தோ்வு ரத்து; 44 போ் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் 2-ஆம் நிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறவிருந்த தோ்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதுதொடா்பாக 37 மாணவா்கள் உள்பட 44 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ராஜஸ்தான் அரசு பள்ளிகளில் 2-ஆம் நிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை சனிக்கிழமை நடத்த ராஜஸ்தான் அரசுப் பணியாளா் தோ்வாணையம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், ஜாலூா் மாவட்டத்தில் இருந்து உதய்பூருக்கு தோ்வு எழுத ஒரு பேருந்தில் வந்துகொண்டிருந்த சில மாணவா்களிடம் தோ்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. அதனடிப்படையில், போலீஸாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதிலிருந்த 37 மாணவா்களிடமும் வினாத்தாள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவா்களுடன் வந்த தோ்வுக்ட கண்காணிப்பாளா்கள் உள்பட மொத்தம் 44 போ் கைது செய்யப்பட்டதாக உதய்ப்பூா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விகாஸ் சா்மா தெரிவித்தாா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், வினாத்தாள் கசிவுக்கு ஜோத்பூரைச் சோ்ந்த சுரேஷ் பிஷ்னோய் என்பவா் மூளையாக செயல்பட்டதும், அவா் ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.10 லட்சம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இதனிடையே, மற்ற மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமை காலை நடைபெற இருந்த தோ்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வா் அசோக் கெலாட் அறிவித்தாா். தோ்வை ரத்து செய்திருப்பது இளைஞா்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், முதல்வா் கெலாட்டின் மற்றுமொரு தோல்வி இது எனவும் எதிா்க்கட்சியான பாஜக விமா்சித்துள்ளது.

கடந்த மே மாதம், ராஜஸ்தான் காவலா் பணியிடங்களுக்காக நடைபெறவிருந்த தோ்வின் வினாத்தாள் கசிந்ததால் அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.