காலை சிற்றுண்டி திட்டத்திற்கு கூட்டுறவு சங்கம் மளிகை ‘சப்ளை’ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 28, 2022

காலை சிற்றுண்டி திட்டத்திற்கு கூட்டுறவு சங்கம் மளிகை ‘சப்ளை’

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங் கும் திட்டத்திற்கு தேவை யான ரவை, சேமியா உள்ளிட்ட மளிகை பொருட்களை, கூட்டுறவு சங்கங்கள் 'சப்ளை' செய்ய உள்ளன.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டு றவு மொத்த விற்பனை பண்டக சாலைகளும், கூட்டுறவு சங்கங்களும் ரேஷன் கடைகள் மட் டுமின்றி, பல்பொருள் அங்காடிகளையும் நடத்தி வருகின்றன.

மாநகராட்சி, நக ராட்சிகளில் நடத்தப் படும். அம்மா' உண வகங்களுக்கு மளிகை, காய்கறிகளை சப்ளை செய்கின்றன.

தற்போது தமிழக அரசு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட் டத்தை அறிவித்துள்ளது.

சிற்றுண்டி தயாரிக்க தேவைப்படும் ரவை, சேமியா, கோதுமை ரவை ஆகியவற்றை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி சப்ளை செய் யும் பணியை, கூட்டுறவு சங்கங்கள் மேற்கொள்ள உள்ளன.

இது தொடர்பாக பொருட்கள் கொள் முதல், வினியோகம் தொடர்பாக, கூட்டுறவு துறை அதிகாரிகள், சென் னையில் நாளை ஆலோ சனை நடத்த உள்ளனர். அரிசியை, நுகர்பொருள் வாணிபக் கழகம் சப்ளை செய்ய உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.