3% அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

3% அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் வரவேற்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் ~~~~~

கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசு 3% விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி 31% விழுக்காடில் இருந்து 34 விழுக்காடாக வழங்கியது , தமிழ்நாடு அரசு அரசும் 3% விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கேட்டுக் கொண்டோம் , கோரிக்கையை ஏற்று நிதி பற்றாக்குறை இருப்பினும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலராக திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறு உருவம் ஓயா உழைப்பாளி தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மகிழ்ச்சியும் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், அதே நேரத்தில் ஒன்றிய அரசு 1.1.2022 தேதியிட்டு வழங்கியது போல் முன் தேதியிட்டு வழங்கினால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள் , என்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான பழை ஓய்வூதிட்டம் கொண்டுவருதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றுவீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.