புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 5-வது புத்தகத்திருவிழா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற பெயரில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் கவிதா ராமு, மாணவிகளுடன் இணைந்து புத்தகம் வாசித்தார்.
இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் புதுச்சேரி வாசிக்கிறது நிகழ்ச்சி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.