பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் விதிமீறல் தொடர்பாக ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் 1,757 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அடிப்படையில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தனியார் வாகனங்கள், மற்றும் ஆட்டோக்களில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் போது, போக்குவரத்து விதிகளை மீறி, வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் செல்வது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | G.Os of Finance Department - 4 G.Os - PDF - July 20,2022
இது தொடர்பாக, காவல்துறை இயக்குநர், காவல்துறை ஆணையர், சென்னை பெருநகர காவல் மற்றும் கூடுதல் காவல் ஆணையர் அறிவுறுத்தல்களின்படி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் மார்ச் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை பெருநகரம் முழுவதும் உள்ள 255 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சாலைப் பாதுகாப்புக் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாமின் போது மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது மற்றும் போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுமாறு பெற்றோர்களுக்கு வலியுறுத்துமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறி பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக நேற்று சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இந்த தணிக்கையின் போது 1757 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையும் படிக்க | Chief Minister's Public Relief Fund (CMPRF) details for efiling (under sec 80G) Income Tax!!
பள்ளி நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை கண்டிப்பாக பின்பற்றவும் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் சிறப்பு விதிகள், 2012ஐ பின்பற்றி பள்ளி பேருந்துகளை எவ்வாறு இயக்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும். அனைத்து வாகன ஓட்டிகளும் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லும் போது போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றி குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து ஒழுக்கத்தை பின் பற்றுவதில் முன்னுதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | G.Os of Finance Department - 4 G.Os - PDF - July 20,2022
இது தொடர்பாக, காவல்துறை இயக்குநர், காவல்துறை ஆணையர், சென்னை பெருநகர காவல் மற்றும் கூடுதல் காவல் ஆணையர் அறிவுறுத்தல்களின்படி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் மார்ச் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை பெருநகரம் முழுவதும் உள்ள 255 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சாலைப் பாதுகாப்புக் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாமின் போது மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது மற்றும் போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுமாறு பெற்றோர்களுக்கு வலியுறுத்துமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறி பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக நேற்று சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இந்த தணிக்கையின் போது 1757 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையும் படிக்க | Chief Minister's Public Relief Fund (CMPRF) details for efiling (under sec 80G) Income Tax!!
பள்ளி நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை கண்டிப்பாக பின்பற்றவும் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் சிறப்பு விதிகள், 2012ஐ பின்பற்றி பள்ளி பேருந்துகளை எவ்வாறு இயக்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும். அனைத்து வாகன ஓட்டிகளும் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லும் போது போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றி குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து ஒழுக்கத்தை பின் பற்றுவதில் முன்னுதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.